×

தமிழ்நாட்டில் நவம்பர் 30-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும்; தமிழக அரசு அறிவிப்பு.!

சென்னை: தமிழ்நாட்டில் நவம்பர் 30-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் டெங்கு பரவி வருவதையும், வடகிழக்குப் பருவமழையும் கருத்தில்கொண்டு ஊரடங்கு நீட்டிப்பு தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகக் கவசம் அணிதல், தனி மனித இடைவெளியை பின்பற்ற தலைமைச் செயலாளர் அறிவுறுத்தல். கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கொரனோ விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாத வர்த்தக நிறுவனம், அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,TN Government , The curfew will be in force in Tamil Nadu till November 30; Government of Tamil Nadu announcement.!
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...