×

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனை 3 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி..!

சென்னை: பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிறாருக்கு எதிரான புகார்களை விசாரிக்கும் சென்னை சிறப்பு போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆசிரியர் ராஜகோபாலனை ஜூன் 3ம் தேதி மீண்டும் ஆஜர்ப்படுத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ராஜகோபாலன் மீது 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் பாலியல் புகார் கூறியிருந்த நிலையில் அவர் கடந்த 24ம் தேதி கைது செய்யப்பட்டார். சென்னை கேகே நகர் பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது முன்னாள் மாணவிகள் பாலியல் தொல்லை புகார் அளித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ராஜகோபால் மீது மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் கடந்த 24ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.அவர் மீது இதுவரை சுமார் 6 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனுக்கு 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைதான பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் கோரிக்கை வைத்தனர். ஆனால் ஆசிரியர் ராஜகோபாலனை 3 நாட்கள் காவலில் எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் ஆசிரியர் ராஜகோபாலன் மட்டுமல்லாது இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட இன்னும் சிலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது….

The post பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனை 3 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி..! appeared first on Dinakaran.

Tags : Padma Seshadri ,Rajagopalan ,Chennai ,Padma Seshatri ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...