நெல்லை: பணகுடியில் பேக்கரியில் திண்பண்டத்தை திருடியதாக கூறப்பட்ட புகாரில் 3 சிறுமிகளை, அவர்களது தாயின் இரண்டாவது கணவர் அந்தோணிராஜ் தீவைத்து எரிக்க முயன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது. 2 சிறுமிகள் தப்பித்த நிலையில் தீக்காயமடைந்த 10 வயது சிறுமி ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீ வைத்தபோது லேசாக தீக்காயம் அடைந்த நிலையில் அந்தோணிராஜும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.