சென்னை: சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் மிதுன் என்ற 10 வயது சிறுவன் மீது சாவியை வீசிய ஆனந்த் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனந்த் வீசிய சாவி பட்டதில் சிறுவன் மிதுனின் இடது கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது. தனது வீடு வாயிலில் விளையாடியதால் ஆத்திரம் அடைந்து சாவியை வீசியதாக ஆனந்த் வாக்குமூலம் அளித்துள்ளார்.