×

தமிழ்நாட்டில் சென்னை, கடலூர் உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்

சென்னை: தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூரில் இன்று அதிகனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்திலும் இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், அரியலூர், தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் இருந்து 340 கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வங்கக்கடலில் மையம் கொண்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து கிழக்கு, தென்கிழக்கு திசையில் 300 கி.மீ தொலைவில் தாழ்வுப்பகுதி மையம் கொண்டுள்ளது.

Tags : Chennai ,Cadalur ,Tamil Nadu , Heavy rain, Red Alert
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...