குன்னூர்: நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரி அடுத்த சோலூர்மட்டம் பகுதியை சேர்ந்தவர் புஷ்பராஜ் (70). கூலி தொழிலாளி. இவரது வீட்டின் அருகே 2 வயது குழந்தை விளையாடி கொண்டிருந்தது. அவளிடம் புஷ்பராஜ் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்ததும் சிறுமியின் தாய், புஷ்பராஜிடம் கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது.
அக்கம் பக்கத்தினர் சோலூர்மட்டம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து, விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் புஷ்பராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.