சென்னை: அரசு நிலத்தில் அனுமதியின்றி கிராவல் மண் எடுத்த விவகாரத்தில் ஓபிஎஸ் மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அரசு நிலத்தில் அனுமதியின்றி ரூ.500 கோடி மதிப்பிற்கு கிராவல் மண் எடுத்ததாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் ஓ.பன்னீர்செல்வம், அவரது உதவியாளர் அன்னப்பிரகாசம் ஆகியோர் மீது வழக்கு பதிய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.