திருவனந்தபுரம்: சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக மீண்டும் ஸ்பாட் புக்கிங் என்கிற உடனடிப்பதிவு நாளை முதல் தொடங்கப்படும் என கேரளா அரசு அறிவித்துள்ளது. பலத்த மழை பெய்ததை அடுத்து 2 நாட்களாக சபரிமலை பக்த்தர்களின் உடனடிப்பதிவு வசதி நிறுத்தப்பட்டிருந்தது. நடை திறந்த முதல் இரு நாட்களிலும் இணையதளத்தில் முன்பதிவு செய்திருந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மழை குறைந்ததை அடுத்து சபரிமலை சன்னிதானம் செல்லும் வழியில் 10 இடங்களில் பக்தர்கள் பதிவு செய்ய வசதி தொடங்கப்பட்டுளள்து.