டெல்லி: டெல்லியில் கற்று மாசு தீவிரமடைந்துள்ளதை அடுத்து மத்திய அரசுப் பணியாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கார்களில் தனியாக பயணிப்பதை தவிர்க்குமாறு மத்திய அரச பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாகனப் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில், CAR POOLING முறையில் பயணிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில், பேருந்துகள் உள்ளிட்ட பொது போக்குவரத்து வசதிகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.