×

சென்னையில் ஏற்பட்டுள்ள மழைநீர் பெருக்கால் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள்

சென்னை : சென்னை தி.நகர் பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளதை அடுத்து அது குறித்த பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை பெருநகரில் வாகன போக்குவரத்தில் தற்போதைய நிலவரம் மழை பெருக்கு காரணமாக செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றம்சென்னை பெருநகர மாநகராட்சி ஊழியர்கள் தி நகர், பசூல்லா சாலையில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள். இதன் காரணமாக ஜிஎஸ்டி சாலை – வாணி மஹால் சந்திப்பிலிருந்து பசூல்லா நோக்கி செல்லும் வாகனங்கள் ஜி.என்.செட்டி சாலை, ஹபிபுல்லா சாலை வழியாக திருப்பி விடப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Chennai , சென்னை
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...