×

சென்னையின் 22 சுரங்கப்பாதைகளும் பயன்பாட்டுக்கு வந்தன : சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை : சென்னையில் மொத்தமுள்ள 22 சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது என்று சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 778 பகுதிகளில் 750 இடங்களில் தேங்கிய மழை நீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டுள்ளது; மீதமுள்ள இடங்களில் மழை நீர் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.சென்னையில் கடந்த அக்டோபர் 25 முதல் நவம்பர் 16 வரை 697.80 மி.மீ. மழை பெய்துள்ளது;அக்டோபர் 25 முதல் நவம்பர் 14 வரை முறிந்து விழுந்த 579 மரங்கள் முழுவதுமாக அகற்றப்பட்டுள்ளது, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Chennai , சென்னை
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...