பெங்களூரு: மறைந்த கன்னட திரைப்பட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு மாநில அரசு வழங்கும் மிக உயரிய விருதான கர்நாடக ரத்னா விருது வழங்கி கவுரவிக்கப்படும் என்று முதல்வர் பசவராஜ்பொம்மை தெரிவித்தார். கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருந்த புனித்ராஜ்குமார், கடந்த மாதம் 29ம் தேதி மாரடைப்பால் பெங்களூருவில் காலமானார்.
அவருக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில் கர்நாடக திரைப்பட வர்த்தகசபை சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று பெங்களூரில் நடந்தது. புனித் படத்தை முதல்வர் பசவராஜ் பொம்மை திறந்து வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தி பேசுகையில், ‘புனித்ராஜ்குமார் மறைந்தாலும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் வாழ்ந்து வருகிறார். அவர் மறைக்க முடியாத வகையில் பல நற்செயல்கள் செய்துள்ளார். அவருக்கு மாநில அரசின் சார்பில் கர்நாடக ரத்னா விருது வழங்கி கவுரவிக்கப்படும்’. என்றார்.