டெல்லி: அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி முனிஷ்வர் நாத் பண்டாரி சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தின் 2வது மூத்த நீதிபதியாக பதவியேற்கும் பண்டாரி, பொறுப்பு தலைமை நீதிபதியாக இருப்பார். பின்னர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.