×

மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்தின் உறவினர்கள் 6 பேர் பலி: பீகாரில் சோகம்

பாட்னா: மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்தின் உறவினர்கள் ஆறு பேர் பீகாரில் நடந்த சாலை விபத்தில் பலியாகினர். பீகார் மாநிலம் லகிசராய் மாவட்டம் ஜுமாய் என்ற இடத்தில் இன்று நடந்த சாலை விபத்தில் மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் உறவினர்கள் ஆறு பேர் பலியாகினர். பாட்னாவில் உள்ளள உறவினரின் இறுதி சடங்குக்கு சென்று திரும்பிய போது காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், மேற்கண்ட ஆறு பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் நான்கு பேர் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஓபி.சிங் கூறுகையில், ‘சிக்கந்தர் -ஷேக்பூர் பிரதான சாலையில் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. சுஷாந்த் சிங்கின் உறவினர்கள் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். காயமடைந்த நான்கு பேரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்தில் பலியானவர்களில் லால்ஜித் சிங் (சுஷாந்த் சிங்கின் மைத்துனர்), நேமானி சிங் என்கிற அமித் சேகர், ராமச்சந்திர சிங், குழந்தை தேவி, அனிதா தேவி, பிரீதம் குமார் (ஓட்டுனர்) ஆகியோர் அடங்குவர்’ என்றார்.


Tags : Bollywood ,Sushant ,Bihar , 6 relatives of late Bollywood actor Sushant killed: Tragedy in Bihar
× RELATED நடிகர் சல்மான்கான் வீடு அருகே நடந்த...