×

மரணத்திலும் விழிப்புணர்வு... புனித் ராஜ்குமார் மரணம் அடைந்த பின்பு கர்நாடகாவில் 15 நாட்களில் 6 ஆயிரம் பேர் கண் தானம்

பெங்களூரு : கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் மறைவைத் தொடர்ந்து கண் தானம் செய்வோரின் எண்ணிக்கை கர்நாடகாவில் அதிகரித்து வருகிறது. கர்நாடகாவில் 15 நாட்களில் 6 ஆயிரம் பேர் கண் தானம் செய்துள்ளனர். கன்னட சினிமா ரசிகர்களால் அப்பு என்றும், பவர் ஸ்டார் என்றும் செல்லமாக அழைக்கப்பட்டு வந்த முன்னணி நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த மாதம் 29-ம் தேதி காலை உயிரிழந்தார். இதையடுத்து முழு அரசு மரியாதையுடன் புனித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தான் உயிருடன் இருக்கும்போதே, மறைவுக்கு பின்னர் கண்களை தானம் செய்வதாக புனித் அறிவித்திருந்தார். இதன்படி அவரது இரு கண்கள் தானம் பெறப்பட்டு, 4 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கண்களின் மேல் பாகம், மற்றும் கீழ்பாகம் தனித்தனியே பிரிக்கப்பட்டு அவை பாதிக்கப்பட்ட 4 பேருக்கு பொருத்தப்பட்டது. மேலும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அவர் அளித்து வந்த கல்வி உதவி, முதியோர் இல்லம் உள்ளிட்ட சேவைகள் நாடு முழுவதும் அவருக்கு ரசிகர்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், புனித்தை பின்பற்றி அவரது ரசிகர்களும் கண்தானம் செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால், கர்நாடகாவில் கண்தானம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புனித்தின் கண்தானத்திற்கு பிறகு மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் 15 நாட்களில் 6 ஆயிரம் பேர் கண் தானம் செய்துள்ளனர்.


Tags : Karnataka ,Puneet Rajkumar , கன்னட நடிகர்
× RELATED கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார் திடீர் ராஜினாமா..!!