×

சிபிஐ, அமலாக்கத்துறை இயக்குநர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம்..!!

டெல்லி: சிபிஐ, அமலாக்கத்துறை இயக்குநர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.  சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை இயக்குநர்களின் பதவிக்காலம் 2 ஆண்டுகளாக உள்ளது.இந்நிலையில் இந்த இரு அமைப்புகளின் இயக்குநர்களின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளாக நீடிக்கும் வகையில் ஒன்றிய அரசு இரண்டு அவசர சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இதன்படி, தற்போது பதவியில் உள்ள இயக்குநர்கள் தங்களது பதவிக்காலம் முடிந்த பிறகும், மேலும் 3 ஆண்டுகள் பதவியில் நீடிக்க முடியும். இந்த சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளார். இதனால், உடனடியாக அமலுக்கு வந்தது.

இதனையடுத்தது, சிபிஐ, அமலாக்கத்துறை இயக்குநர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்ததாவது:  அதிகாரத்தை கைப்பற்ற  மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை கவிழ்க்க தனது விஸ்வாசிகளை  மோடி அரசு பயன்படுத்துகிறது.

மேலும், எதிர்க்கட்சித் தலைவர்களின் வீடுகளில் அமலாக்கப் பிரிவும், சிபிஐ அமைப்பும் சோதனை நடத்துவதை விதியாக வைத்துள்ளன. இயல்பாகவே ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்குப் பதவி நீட்டிப்பு வழங்கப்படும். இப்போது நேரடியாகவே 5 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.


Tags : Congress ,CBI , CBI, Enforcement Department, Congress, Condemnation
× RELATED புதுச்சேரியில் வாக்குப்பதிவு...