×

லக்கிம்பூர் விவகாரம் குறித்த விசாரணையை வேறு மாநில ஓய்வு பெற்ற நீதிபதி கண்காணிக்க உ.பி அரசு சம்மதம்

லக்னோ: லக்கிம்பூர் விவகாரம் குறித்த விசாரணையை வேறு மாநில ஓய்வு பெற்ற நீதிபதி கண்காணிக்க உ.பி அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. விசாரணையை கண்காணிக்கும் ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி பற்றி நவம்பர் 17ல் அறிவிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மூத்த காவல்துறை அதிகாரிகள் சிலரை குழுவில் கூடுதலாக சேர்க்கவும் உ.பி அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. ஓய்வு பெற்ற பஞ்சாப் மற்றும் ஹரியானா ஐகோர்ட் நீதிபதிகள் ராகேஷ்குமார், ரஞ்சித் சிங் பெயர் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Tags : UP government ,Lakkimpur , Lakhimpur issue
× RELATED அயோத்தியில் குழந்தை ராமரை தரிசிக்க...