×

அடிப்படை வசதிகளை ஏன் செய்யல?: குமரி நிவாரண முகாம்களில் அலட்சியம் காட்டிய அரசு அதிகாரிகளை அலறவிட்ட அமைச்சர் மனோ தங்கராஜ்..!!

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் நிவாரண முகாம்களில் அடிப்படை வசதிகளை செய்து தராத அதிகாரிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் கடுமையாக கடிந்துகொண்ட காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. குமரி மாவட்டத்தில் மழை, வெள்ள பாதிப்புகளால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கலிங்கராஜபுரம் பகுதியில் உள்ள முகாமில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது மின்சாரம், உணவு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தராததை கண்ட அமைச்சர், ஆவேசமடைந்து அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி எழுப்பி கடிந்துக்கொண்டார். அமைச்சரின் அறிவுறுத்தலை தொடர்ந்து ஜெனரேட்டர் வரவழைக்கப்பட்டு முகாமுக்கு மின்வசதி செய்து கொடுக்கப்பட்டது. முகாமில் அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனடியாக செய்து தர வேண்டும் என அதிகாரிகளுக்கு கண்டிப்புடன் அமைச்சர் கூறிய இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Tags : Minister ,Mano Dandaraj ,Kumari Relief Camps , Kumari Relief Camp, Government Officer, Minister Mano Thankaraj
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...