×

அசாமில் 3 மாதத்துக்கு நோ பைட்: உல்பா அறிவிப்பு

கவுகாத்தி:  அசாமில் மாநிலத்தில் செயல்பட்டு வரும் உல்பா தீவிரவாத அமைப்பு, மேலும் மூன்று மாதங்களுக்கு போர் நிறுத்தத்தை தன்னிச்சையாக அறிவித்துள்ளது. அசாம் மாநிலத்தில் ‘தனிநாடு’ கோரிக்கையுடன் பல்வேறு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் ‘உல்பா’ அமைப்பும் முக்கியமானது. ஒன்றிய அரசு இதனை தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. கடந்த மே மாதம் கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு உல்பா அமைப்பு 3 மாத போர் நிறுத்தத்தை அறிவித்தது. பின்னர், கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி இது மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், தனது போர் நிறுத்த காலத்தை மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பதாக இதன் தலைவர் பரேஷ் அசோம் நேற்று தன்னிச்சையாக அறிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு போர் நிறுத்தம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. இந்த கால கட்டத்தில் அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் உல்பா தவிர்த்துவிடும். அமைப்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்படுவது மட்டும் தொடர்ந்து நடைபெறும்,’ என கூறியுள்ளார்.

Tags : Assam ,ULFA , Assam, No Fight, ULFA, Announcement
× RELATED எல்லோருக்கும் எல்லாவற்றையும் என்ற...