×

‘ஃபிட்னஸ்’ நிறுவன முதலீடு விவகாரம்; நடிகை ஷில்பா, கணவர் மீது வழக்கு: மும்பை போலீஸ் நடவடிக்கை

மும்பை: ‘ஃபிட்னஸ்’ நிறுவன முதலீடு விவகாரம் தொடர்பாக நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் உள்ளிட்டோர் மீது மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா மீது செக்ஸ் ஆப்ஸ் தயாரித்து வெளியிட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் உள்ளார். இந்நிலையில் மும்பையின் பாந்த்ரா காவல் நிலையத்தில் நிதின் பராய் என்பவர், ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ் குந்த்ரா, எஸ்எஃப்எல் ஃபிட்னஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் காசிப் கான் ஆகியோர் மீது புகார் அளித்தார். அதில், ‘ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா ஆகியோர் உடற்பயிற்சி மையத்தை தொடங்குவதற்காக பணம் முதலீடு செய்ய கோரினர். அதில் வரும் லாபத்தை பகிர்ந்து கொடுப்பதாக கூறினர்.

அவர்களது பேச்சை நம்பி, அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தேன். ஆனால், அவர்கள் குறிப்பிட்டபடி எனக்கு லாபத்தில் பங்கு தரவில்லை. நான் முதலீடு செய்த பணத்தை திருப்பி கேட்டால், அவர்கள் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே, மூவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். அதையடுத்து, ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா, காசிப் கான் உள்ளிட்டோருக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் 406, 409, 420, 506, 34 மற்றும் 120 (பி) பிரிவுகளின் கீழ் பாந்த்ரா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். தற்போதைய புதிய வழக்கால் ராஜ் குந்த்ரா மற்றும் ஷில்பா ஷெட்டியிடம் போலீசார் விரைவில் விசாரணை நடத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Shilpa ,Mumbai , ‘Fitness’ corporate investment affair; Actress Shilpa, case against husband: Mumbai police action
× RELATED புனேவில் உள்ள பங்களா உட்பட ஷில்பா...