சென்னை: ஜவஹர்லால் நேருவின் 133வது பிறந்த தினத்தையொட்டி அவரது சிலைக்கு ஆளுநர், அமைச்சர்கள் மரியாதை செலுத்தியுள்ளனர். சென்னை கிண்டியில் உள்ள நேரு சிலையின் கீழ் வைக்கப்பட்ட அவரது உருவப்படத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன், மு.பெ.சாமிநாதன் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளனர்.