×

வைகோ வேண்டுகோள் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய கால நீட்டிப்பு வேண்டும்

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் மானாவாரி பயிர்களான உளுந்து மற்றும் பாசி பயிர்களுக்கு பல மாவட்டங்களில் நாளை (15ம் தேதி) உடன் காப்பீடு முடிவடைகிறது. பல மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்து வருவதால், வழங்கப்பட்ட கால அவகாசத்தை நீட்டித்து வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் கடந்த 24 மணி நேரமாக பயிர் காப்பீடு இணையதளத்தின் ஆதார் இணைப்பு சேவை தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு, நேற்று இரவு முதல் சீரடைந்து உள்ளது.

மேற்குறிப்பிட்ட நியாயமான காரணங்களை கருத்தில் கொண்டு மானாவாரி உளுந்து மற்றும் பாசி பயிர்களுக்கு காப்பீட்டு செய்யும் காலவரையறையை பத்து நாட்கள் கூடுதலாக நீட்டித்து, 25.11.2021 வரை காப்பீடு செய்து கொள்ள அனுமதி அளித்து உத்தரவிடுமாறு ஒன்றிய அரசையும், தமிழக அரசையும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

Tags : Waiko , Waiko, request, farmers, extension
× RELATED ஈகைத் திருநாள், மனிதநேயத்தின்...