×

தொடர் மழை காரணமாக 2,359 கோயில் குளங்கள் நிரம்பியது

சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் உள்ள 2,359 கோயில் குளங்கள் நிரம்பியுள்ளது என்று அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் தொடர்ச்சியாக கனமழை பெய்ததால், அனைத்து கோயில் குளங்களும் நிரம்பியுள்ளது.  குறிப்பாக, சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்,பார்த்தசாரதி கோயில், வடபழனி முருகன் கோயில், திருச்சி திருவனைக்காவல், ரங்கம், நந்தி கோயில் தெரு நாகநாத சுவாமி கோயில், திருச்சி மலைக்கோட்டை வரை திருச்சி மண்டல கோயில் குளங்கள் நிரம்பியுள்ளன.மேலும், தென் மாவட்டங்களான மதுரை தெப்பகுளம் மாரியம்மன் கோயில், திருப்பரங்குன்றம் சரவண பொய்கை குளங்கள் உட்பட கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் கோயில் பகவதியம்மன் கோயில் வரை 2359 கோயில் குளங்களும் நிரம்பியுள்ளன.  

இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள 1,586 கோயில்களுக்கு 2,359 குளங்கள் உள்ளன. இவற்றில் 1,068 திருக்குளங்கள் புனரமைப்பு செய்ய வேண்டிய நிலையில் 835 குளங்கள் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. மீதம்  உள்ள திருக்குளங்களை சீரமைப்பு செய்ய தனியாக செயலாக்கத் திட்டம் தயாரிக்கப்பட்டு பகுதி பகுதியாக பணிகள் நடைப்பெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக 2021 முதல் 2022 வரை சட்டமன்ற மானிய கோரிக்கையின்போது, சென்னை, மாதவரம் கைலாசநாத சுவாமி கோயிலுக்குப் புதிய திருக்குளம் ₹2 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார். அதன்படி தை மாதம் முதல் இப்பணிகள்  துவங்கப்பட உள்ளது.

மேலும் கோயில் குளங்கள் உள்ளும், புறமும்  உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றுதல், கோயில் குளங்களை சுற்றுச்சுவர் அமைத்தல், குளங்களில் உள்ள படிகளை சீரமைத்தல் மற்றும் மழை நீர் வருவதற்கும் உபரி நீர் வெளியேறுவதற்கும் வழி ஏற்படுத்துதல் போன்ற பணிகள் முழு வீச்சில் நடைப்பெற்று வருகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : Series, showers, pools, packed
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...