சென்னை: அந்தமானில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பெரிய அளவில் கனமழைக்கு வாய்ப்பு இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவாகியுள்ள தாழ்வு பகுதியால் ஆந்திராவில் கனமழை பெய்ய வாய்ப்பு அதிகமுள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறுமா என இப்போதைக்கு சொல்ல முடியாது என்று தெரிவித்துள்ளார். வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் குமரி, நெல்லை மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.