தஞ்சை: தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1036வது சதயவிழாவை முன்னிட்டு, அவரது சிலைக்கு ஆட்சியர் தலைமையில் சதய விழா குழுவினர் மாலை அணிவித்தனர். ஓதுவார்கள் பன்னிரு திருமுறைகள் யானை மீது வைத்து கோவிலை சுற்றி வலம் வந்தனர். தொடர்ந்து மூலவர் பெருவுடையார் திருமேனிக்கு 38 வகையான பேராபிஷேகம் நடைபெற்றது.