சென்னை: சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுப்பதற்கு ஆலோசனை தர குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் 14 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் எங்கெங்கு மழைநீர் தேங்குகிறது. தடுக்க என்னவழி என்பது பற்றி குழு ஆராய்ந்து அறிக்கை தரும். குழுவின் தலைவரான அதிகாரி திருப்புகழ் டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.