×

பாஜ நிர்வாகிகள் அதிரடி மாற்றம் செங்கல்பட்டு மாவட்ட தலைவராக வேதா சுப்பிரமணியம் நியமனம்: மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு

சென்னை: தமிழக பாஜ நிர்வாகிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்ட தலைவராக வேதா சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக பாஜ தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டத்தில் இருந்து கட்சியில் பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக தற்போது 8 மாவட்டங்ளுக்கு மாவட்ட தலைவர்களை மாற்றி, புதிய மாவட்ட தலைவர்களை அவர் அறிவித்துள்ளார். அதன்படி செங்கல்பட்டு மாவட்ட பாஜ தலைவராக அ.வேதா சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை நகர்- முன்னாள் எம்எல்ஏ டாக்டர் பி.சரவணன், திருச்சி நகர்- எஸ்.ராஜசேகரன், திருச்சி புறநகர்- ஆர்.அஞ்சா நெஞ்சன், கரூர்- வி.செந்தில்நாதன், பெரம்பலூர்- பி.செல்வராஜ், விழுப்புரம்-ஏ.டி.ராஜேந்திரன், கோவை வடக்கு-சங்கீதா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். திருச்சி நகர் மாவட்ட பார்வையாளராக லோகிதாஸ், ராமநாதபுரம் மாவட்ட பார்வையாளராக ஜி.பி.எஸ்.நாகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளனர்.  மாநில செயற்குழு உறுப்பினர்களாக கே.கே.சீனிவாசன்- மதுரைநகர், ஏ.ராஜேஷ்குமார்- திருச்சி நகர், சி.ராஜேந்திரன்-திருச்சி புறநகர், கே.சிவகாமி-கரூர், சி.சந்திரசேகரன்-பெரம்பலூர், முன்னாள் எம்எல்ஏ வி.ஏடி.கலிவரதன் -விழுப்புரம், வி.பலராமன்- செங்கல்பட்டு,  வி.பி.ஜெகன்நாதன்- கோயமுத்தூர் வடக்கு, சேது அரவிந்த்- திருச்சி புறநகர் ஆகியோரை நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags : BJP ,Chengalpattu ,Vedha Subramaniam ,State President ,Annamalai , BJP executives, Chengalpattu district chief, Vedha Subramaniam, state president Annamalai
× RELATED செங்கல்பட்டு அல்லானூர் அருகே...