×

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை: செங்கை, காஞ்சியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

சென்னை: சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், ெசங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிக்கு மட்டும் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு வருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சனிக்கிழமை இரவு முதல் நல்ல மழை பெய்து. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை தொடர்ச்சியாக கொட்டி தீர்த்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. பல இடங்கள் வெள்ள நீரில் மூழ்கின. இந்த நிலையில் நேற்று சென்னையில் வெயில் அடிக்க தொடங்கியது. ஒரு வாரத்திற்கு பிறகு நேற்று வெயில் அடித்ததால் மக்கள் சந்தோஷம் அடைந்தனர்.

அதே நேரத்தில் பல இடங்களில் மழை நீர் இன்னும் வடியாமல் உள்ளது. இந்த நிலையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து சென்னை மாவட்ட கலெக்டர் விஜயாராணி உத்தரவிட்டுள்ளார். அதே ேபால திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

Tags : Chennai ,Tiruvallur ,Kanchi , Chennai, Tiruvallur, School, College, Holidays,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...