சென்னை: சென்னை மந்தைவெளி சாலையில் தேங்கிய மழைநீரில் நடந்து சென்ற முதியவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். திருவல்லிகேணியை சேர்ந்த சக்திவேல் என்பவர் மந்தைவெளியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இவர் வீட்டுக்கு செல்வதற்காக மந்தைவெளி பேருந்து பணிமனை அருகே சாலையில் தேங்கிய மழைநீரில் நடந்தபோது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சென்ற மின்வாரிய பணியாளர்கள் மின் விநியோகத்தை நிறுத்தினர்.
இதனிடையே போக்குவரத்து சிக்னலுக்கு செல்லும் மின் இணைப்பிலிருந்து மின்சாரம் பாய்ந்ததா அல்லது தெருவிளக்கிற்கு செல்லும் மின் இணைப்பிலிருந்து மழை நீரில் மின்சாரம் பாய்ந்ததா என்பது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். அதே நேரத்தில் முதியவர் உயிரிழப்பிற்கு முன்பாக நாய் ஒன்றும் அதே இடத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகவும் இது குறித்து மக்கள் தகவல் தெரிவித்தும் மின்வாரியத்தினர் துரிதமாக நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மந்தைவெளி சாலையில் தேங்கிய மழைநீரில் நடந்து சென்ற போது மின்சாரம் பாய்ந்து முதியவர் பலி
சென்னை: சென்னை மந்தைவெளி சாலையில் தேங்கிய மழைநீரில் நடந்து சென்ற முதியவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். திருவல்லிகேணியை சேர்ந்த சக்திவேல் என்பவர் மந்தைவெளியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இவர் வீட்டுக்கு செல்வதற்காக மந்தைவெளி பேருந்து பணிமனை அருகே சாலையில் தேங்கிய மழைநீரில் நடந்தபோது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சென்ற மின்வாரிய பணியாளர்கள் மின் விநியோகத்தை நிறுத்தினர்.
இதனிடையே போக்குவரத்து சிக்னலுக்கு செல்லும் மின் இணைப்பிலிருந்து மின்சாரம் பாய்ந்ததா அல்லது தெருவிளக்கிற்கு செல்லும் மின் இணைப்பிலிருந்து மழை நீரில் மின்சாரம் பாய்ந்ததா என்பது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். அதே நேரத்தில் முதியவர் உயிரிழப்பிற்கு முன்பாக நாய் ஒன்றும் அதே இடத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகவும் இது குறித்து மக்கள் தகவல் தெரிவித்தும் மின்வாரியத்தினர் துரிதமாக நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.