மதுரை: ராஜராஜசோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக இயக்குனர் பா.ரஞ்சித் மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இயக்குனர் ரஞ்சித் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது. 2019 ஜூன் 5ம் தேதி நீலப்புலிகள் அமைப்பு சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராஜராஜசோழன் பற்றி பா.ரஞ்சித் பேசியிருந்தார்.