புதுச்சேரி: புதுச்சேரியில் மழையால் சேதம் அடைந்த வீடுகளுக்கு முதலமைச்சர் ரங்கசாமி தலா ரூ.25,000 நிவாரணம் அறிவித்தார். பாதிப்படைந்த விளை நிலங்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 வழங்கப்படும். மழையால் பாதிக்கப்பட்ட கட்டுமான தொழிலாளர், மீனவர்களுக்கு குடும்ப அட்டைக்கு தலா ரூ.5,000 நிவாரணம் வழங்கப்படும் என்றும் புதுச்சேரி அரசு அறிவித்திருக்கிறது.