×

மழை, வெள்ள பாதிப்பில் தமிழக அரசு, மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது: தாமாக விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு

சென்னையில் மழை, வெள்ள பாதிப்புக்களை சரிசெய்ய தமிழக அரசு, மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுத்து வருவதால் தாமாக விசாரிக்க வேண்டியதில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருக்கிறது. தமிழக அரசு, மாநகராட்சி நடவடிக்கைகளை தொடர அனுமதிக்க வேண்டும் என நீதிபதி கூறியுள்ளார். மழை, வெள்ள பாதிப்பு பிரச்சனையில் தற்போது உயர்நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் ஐகோர்ட் குறிப்பிட்டிருக்கிறது. மழை, வெள்ள பாதிப்பு பிரச்சனையில் ஐகோர்ட் தானே முன்வந்து விசாரிக்க வேண்டும் என்று கிருஷ்ணமூர்த்தி என்பவர் முறையீடு செய்திருந்தார்.


Tags : Government of Tamil Nadu ,iCourt , Rain, Flood, Government of Tamil Nadu, Icord
× RELATED பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி...