×

ஓட்டேரி கால்வாயில் விழுந்த சிறுவன் உயிருடன் மீட்பு

பெரம்பூர்: ஓட்டேரி பழைய வாழைமா நகர் பகுதியை சேர்ந்தவர் குட்டி. இவரது மகன் பாபு(15). நேற்று மாலை 6 மணியளவில் ஓட்டேரி நல்லா கால்வாய் பகுதியில் தண்ணீர் அதிகமாக செல்வதை பார்ப்பதற்காக பாபு வந்துள்ளான். அப்போது கால்வாயின் ஆழம் எவ்வளவு உள்ளது என்பதை பார்ப்பதற்காக ஒரு காலை வைத்து லேசாக கால்வாயில் இறங்கினான். அப்போது தண்ணீரின் வேகம் அதிகரிக்கவே பாபு தண்ணீரில் அடித்து செல்லப்பட்டான்.

அப்போது ஓட்டேரி மேம்பாலத்தின் மீது ஓட்டேரி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் தன்னார்வ அமைப்பை சேர்ந்த 10 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அவ்வழியாக சென்றவர்கள் கூச்சலிடவே உடனடியாக கால்வாய் பகுதிக்குச் சென்று கயிறு கட்டி இரண்டு பேர் உள்ளே இறங்கி சிறுவனை பத்திரமாக மீட்டனர். பின்பு கரைக்கு கொண்டு வரப்பட்ட சிறுவனுக்கு முதலுதவி அளித்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.


Tags : Ottery , Otteri Canal, boy, rescue
× RELATED வண்டலூர் அடுத்த ஓட்டேரியில் மெடிக்கல் கடை உரிமையாளர் வெட்டிக் கொலை!!