×

செல்சீ 2வது முறையாக சாம்பியன்

போர்டோ: ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டித் தொடரில் இங்கிலாந்தின் செல்சீ அணி 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. போர்ச்சுகல் நாட்டின் போர்டோ நகரில் நேற்று நடந்த பரபரப்பான இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை சேர்ந்த செல்சீ  மான்செஸ்டர் சிட்டி அணிகள் மோதின. செல்சீ அணி 3வது முறையாகவும், மான்செஸ்டர் சிட்டி அணி முதல் முறையாகவும் இத்தொடரின் பைனலில் களமிறங்கின. மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் செல்சீ அணி 1-0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டி அணியை வீழ்த்தி 2வது முறையாக கோப்பையை முத்தமிட்டது. அந்த அணியின் கெய் ஹாவெர்ட்ஸ் 42வது நிமிடத்தில் அபாரமாக கோல் அடித்து வெற்றிக்கு உதவினார். முன்னதாக, 2011-12 சீசனில் செல்சீ அணி முதல் முறையாக பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. சாம்பியன்ஸ் லீக் தொடரில் 2 முறை பட்டம் வென்ற 3வது இங்கிலாந்து கிளப் என்ற பெருமை செல்சீ அணிக்கு கிடைத்துள்ளது. லிவர்பூல் (2004-05, 2018-19), மான்செஸ்டர் யுனைட்டட் (1998-99, 2007-08) ஏற்கனவே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளன….

The post செல்சீ 2வது முறையாக சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : Chelsea ,Porto ,England ,European Champions League football ,Dinakaran ,
× RELATED பட்லர் தலைமையில் பலமான இங்கிலாந்து