கடலூர்: எண்ணூர், கடலூர், நாகை மற்றும் காரைக்காலில் உள்ள துறைமுகங்களில் 3 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி (Low Pressure area) இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (Depression) வலு பெற்று புதுச்சேரிக்கு கிழக்கு தென் கிழக்கே 420km, சென்னைக்கு கிழக்கு தென் கிழக்கே 430 km தொலைவில் உள்ளது. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து 11ம் தேதி மாலை வட தமிழகத்தில் காரைக்காலுக்கும் ஆந்திரா மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டா இடையே புதுச்சேரிக்கு வடக்கே கரை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுபள்ளி, புதுச்சேரி, காரைக்கால் வட தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் துறைமுகங்களில் 3 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.