சென்னை: மின்தடை ஏற்பட்டுள்ள இடங்கள் இன்று இரவுக்குள் சீரமைக்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டியளித்துள்ளார். தியாகராயர் நகர், எழும்பூர், அம்பத்தூர் உள்ளிட்ட 41 இடங்களில் மின்மாற்றிகள் நிறுத்தப்பட்டுள்ளது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 4,000 கள பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். 10 மாவட்டங்களில் 12 ஆயிரம் மின் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். மழை அளவு அதிகமாக இருந்தாலும் மின்வாரியம் எதிர்கொள்ள தயாராக உள்ளது என்று கூறியுள்ளார்.