×

தமிழ்நாட்டில், கழிவுகளை அகற்ற மனிதர்களை ஈடுபடுத்தும் நடைமுறையை முழுவதுமாக ஒழிக்க வேண்டும் : ஐகோர்ட்!!

சென்னை : தமிழகத்தில் கழிவுகளை அகற்ற மனிதர்களை ஈடுபடுத்தும் நடைமுறையை முழுவதுமாக ஒழிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதாளச் சாக்கடைகள், கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்வதற்கு மனிதர்களை பயன்படுத்துவதை எதிர்த்தும் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்கள் நிவாரணம் பெறுவதை உறுதி செய்யக்கோரியும் சபாய் கர்மாச்சாரி அந்தோலன் என்ற அமைப்பின் சார்பில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று  மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,  மனுதாரர் அமைப்பின் சார்பில் அளிக்கப்பட்ட ஆலோசனைகள் குறித்த அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்தது.தமிழகத்தில் எந்த மாநகராட்சியிலும் கழிவுகளை அகற்ற மனிதர்கள் ஈடுபடுத்தப்படவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.வழக்கை விசாரித்த நீதிபதிகள், கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்படுவோருக்கு மாற்று வேலை உள்ளது என விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும், பாதாள சாக்கடைகளில் கழிவுகளை அகற்றும் போது பலியானவர்களுக்கு வழங்கப்படும் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு போதாது என்பதால் அதை அதிகரித்து வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டனர்.

Tags : Tamil Nadu , பாதாளச் சாக்கடை
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...