×

சிவகாசி பகுதியில் தொடர் மழையால் வேகமாக நிரம்பி வரும் ஊருணிகள்

சிவகாசி: தொடர் மழையால் சிவகாசி பகுதி கிராம ஊருணிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. சிவகாசி பகுதியில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களாக விடிய, விடிய மழை பெய்து வருகிறது. இத்தொடர் மழையால் கண்மாய்களுக்கு எதிர்பார்த்த அளவு நீர்வரத்து இல்லாத போதிலும், கிராமங்களில் உள்ள ஊருணிகள் நிறைந்து வருகின்றன.

எஸ்.புதுப்பட்டி, வடபட்டி, நெடுங்குளம், நிறைமதி, பூவநாதபுரம், கொத்தனேரி், கிச்சநாயக்கன்பட்டி உள்ளிட்ட பெரும்பாலான கிராமங்களில் உள்ள ஊருணிகள் நிரம்பி வருகின்றன. தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் சிவகாசி பகுதிகளில் உள்ள அனைத்து ஊருணிகளும் நிரம்பி விடும் வாய்ப்பு உள்ளது. இதன்மூலம் சிவகாசி பகுதி கிராமங்களில் ஒரு வருடத்திற்கு நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என பொதுமக்கள் தெரிவித்தனர்.



Tags : Shikhazi , Sivakasi, rain, overflow, uruni
× RELATED விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே...