கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தாய் சேய் நல கட்டிடத்தில் ஆக்ஸிஜன் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்புதுறையினர் விரைந்து செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. தாய்சேய் நல கட்டிடத்தில் கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட தாய்மார்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.