பிரிட்டன்: நோபல் பரிசு பெற்ற மலாலாவிற்கு பிரிட்டனில் எளிமையான முறையில் திருமணம் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பெண் குழந்தைகள் கல்விக்காக போராடியதற்காக மலாலா மீது தலிபான் பயங்கரவாதிகள் 2012ல் தாக்குதல் நடத்தினர். தலையில் குண்டு பாய்ந்த நிலையில், அவர் உயிர் தப்பினார். இந்த சம்பவம் உலக அளவில் பரபரப்பானது. இதனையடுத்து அமைதிக்கான நோபல் பரிசு வென்றுள்ள மலாலா, கடந்த ஜனவரியில் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் திருமணம் எதிர்காக என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அசர் என்பவருடன் பிரிட்டனில் உள்ள பர்மிங்ஹாமின் எளிமையான முறையில் திருமணம் நடந்ததாக தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், மலாலா திருமண புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில், அசரும் நானும் வாழ்க்கைக்கு துணையாக இருக்க முடிவு செய்தோம். தன் வாழ்வில் இதுவொரு பொன்னான நாள் என்றும் தங்கள் குடும்பத்துடன் பர்மிங்ஹாமின் உள்ள வீட்டில் ஒரு சிறிய நிக்கா விழாவை கொண்டாடியதாகவும், எங்கள் பயணத்தில் ஒன்றாக முன்னோக்கி நடப்பதில் மகிழ்ச்சியடைகிறோம் என பதிவிட்டுள்ளார். மேலும் அனைவரும் தங்கள் ஆசிர்வாதத்தை எங்களுக்கு அனுப்புங்கள் என்றும் அதில் தெரிவித்துள்ளார். இதையடுத்து மலாலாவிற்கு ஏராளமானோர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.