×

மேம்பாலத்தில் ஆட்டோவை நிறுத்தி அரை நிர்வாணமாக குத்தாட்டம்: போதை ஆசாமிகள் 6 பேர் கைது

சென்னை: தேனாம்பேட்டை பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் மேம்பாலத்தின் மீது ஆட்டோவை நிறுத்திவிட்டு, அரை நிர்வாணமாக குடிபோதையில் குத்தாட்டம் போட்ட 6 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை அயப்பாக்கம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் அனிஷ்குமார் (31). தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். தேனாம்பேட்டை வாணி மஹால் மேம்பாலம் அருகே கடந்த 7ம் தேதி மாலை நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மேம்பாலத்தில் ஆட்டோவை நிறுத்தி குடிபோதையில் இருந்த 6 பேர் அரை நிர்வாணமாக அனிஷ்குமாரை வழிமறித்து தகாத வார்த்தைகளால் பேசி குத்தாட்டம் போட்டுள்ளனர்.

அதேபோல் மேம்பாலத்தின் வழியாக ெசன்ற பொதுமக்கள் அனைவரையும் போதையில் வழிமறித்து ஆட்டம் போட்டுள்ளனர்.இதுகுறித்து அனிஷ்குமார் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆட்டோவில் மது அருந்திக் கொண்டு குத்தாட்டம் போட்ட கோடம்பாக்கம் கிராமணிபுரம் பகுதியை சேர்ந்த அருண்குமார் (21), தி.நகர் ஆர்.கே.புரம் பகுதியை சேர்ந்த நரேஷ்குமார் (21), மணிகண்டன் (21), பவீன் (19), பாலமுருகன் (19), ஆகாஷ் (23) ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.



Tags : Overpass, auto, half-naked stabbing, drug addicts, arrested
× RELATED சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 87.13% மாணவ, மாணவியர் தேர்ச்சி: 56 பேர் 100/100