×

அடையாறு ஆற்றில் ஆண் சடலம் மீட்பு போலீசார் விசாரணை

வேளச்சேரி: அடையாறு ஆற்றில் மிதந்த ஆண் சடலத்தை போலீசார் மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை அடையாறு திருவிக பாலத்தின் கீழ் அடையாற்றில் நேற்று சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதந்தது. இதை பார்த்த பொதுமக்கள், அடையாறு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார்   மற்றும் மயிலாப்பூர் தீயணைப்பு துறை அதிகாரி இன்பராஜ்   தலைமையில் 6 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

பின்னர், தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி தண்ணீரில் மிதந்த   சடலத்தை மீட்டு   கரைக்கு கொண்டு வந்தனர். இதையடுத்து போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு   அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து  வழக்குப்பதிவு செய்து,  இறந்து கிடந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், எப்படி இறந்தார்,  யாராவது கொலை செய்து, சடலத்தை ஆற்றில் விசினார்களா அல்லது தற்கொலையா  என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Adyar River , Adyar, male corpse, rescue, police, investigation
× RELATED அடையாறு நதி சீரமைப்புக்கு ரூ.1500 கோடி...