சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி 36 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வட தமிழகம் நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை - கடலூர் இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிலக்கும் என கூறப்பட்டுள்ளது.