×

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் மேலும் 10,126 பேர் பாதிப்பு; 332 பேர் உயிரிழப்பு; 11,982 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

புதுடெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,61,389 ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை 9.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 10,126 பேர் பாதித்துள்ளனர்.

* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,43,77,113 ஆக உயர்ந்தது.

* புதிதாக 332 பேர் இறந்துள்ளனர்.

* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,61, 389  ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 11,982 பேர் குணமடைந்துள்ளனர்.

* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 3,37,75,086 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,40,638  பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* நேற்று 59,08,440 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

* இந்தியாவில் இதுவரை 1,09,08,16,356 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

* கொரோனவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 98.24%; உயிரிழப்பு விகிதம் 1.34% ஆக உள்ளது.

Tags : India , Another 10,126 people have been affected by corona in India in the last 24 hours; 332 fatalities; 11,982 recovered and discharged
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!