மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது. 23.3 அடியை முழு கொள்ளளவை ஏரி எட்டியதை தொடர்ந்தும் ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரிப்பதை கருத்தில் கொண்டு விநாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை தகவல் அளித்துள்ளது.