×

மழை வெள்ளம் புகுந்ததால் ஆதம்பாக்கம் காவல்நிலையம் தற்காலிகமாக இடம் மாற்றம்

சென்னை: சென்னையில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்து வருவதால் பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாக, தாழ்வான சாலைகள், குடியிருப்புகளில் தண்ணீர் தேங்கி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதன்படி, ஆதம்பாக்கம், மடிப்பாக்கம் பகுதிகளில் அதிகளவில் மழைநீர் தேங்கி உள்ளதால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆதம்பாக்கம் காவல் நிலையம் தாழ்வாக உள்ளதால், அங்கு வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால், போலீசார் காவல் நிலையத்தில் பணி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி ஆதம்பாக்கம் காவல் நிலையம் தற்காலிகமாக புது காலனி 2வது தெரு, பழைய எண்.39, புதிய எண்.12 என்ற முகவரியில் உள்ள வீட்டின் முதல் தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர உதவிக்கு இன்ஸ்பெக்டர் வளர்மதியை 94449 70835 என்ற எண்ணிலும், காவல்நிலையத்தை 94981 00161 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Adambakkam , Adambakkam police station temporarily relocated due to heavy rains
× RELATED துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு