×

சீனாவில் அதிபர் ஜின் பிங் 3-வது முறையாக பதவியில் நீடிக்க ஒப்புதலா?: தலைநகரில் ஆளும் கம்யூ. கட்சியின் மத்திய குழு இன்று கூடுகிறது..!!

பெய்ஜிங்: சீனாவின் அதிபர் ஜின் பிங் 3-வது முறையாக பதவியில் தொடர ஒப்புதல் அளிப்பதற்காக ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு இன்று கூடுகிறது. தலைநகர் பெய்ஜிங்கில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது. அதில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். கட்சியின் 100 ஆண்டு போராட்டத்தில் கிடைத்த அனுபவங்கள் மற்றும் சாதனைகள் குறித்த தீர்மானம் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகிறது.

அத்துடன் தற்போதைய அதிபர் ஜி ஜின் பிங் 3-வது முறையாக பதவியில் தொடர ஒப்புதல் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 3 நாள் கூட்டத்தில் அதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டால் அடுத்த ஆண்டுக்கு பிறகும் ஜின் பிங் அதிபர் பதவியில் நீடிப்பார். இதன் மூலம் சீனாவில் மாவோ சேதுங்கிற்கு பிறகு சக்தி வாய்ந்த தலைவராக ஜி ஜின் பிங் உருவெடுப்பார் என்று கணிக்கப்படுகிறது.


Tags : President ,Jin Ping ,China ,Central Committee of the party , China, Jin Ping, Position, Com. Party, Central Committee
× RELATED இந்தியாவின் எதிர்காலத்தை...