×

சத்தீஸ்கரில் பரபரப்பு!: துப்பாக்கியால் சக வீரர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்ட சி.ஆர்.பி.எஃப். வீரர்...4 பேர் குண்டு பாய்ந்து உயிரிழப்பு..!!

சுக்மா: மத்திய ரிசர்வ் பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் சக வீரர்கள் 4 பேரை சுட்டுக்கொன்றுள்ளது சத்தீஸ்கரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் லிங்கம்பள்ளி என்ற கிராமத்தில் சி.ஆர்.பி.எஃப்.-யின் 50வது படை பிரிவின் முகாம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று பணியில் இருந்த வீரர் ஒருவர் அதிகாலை 3:30 மணிக்கு ஏ.கே.47 ரக துப்பாக்கியால் சக வீரர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டார். இதில் 4 வீரர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துவிட்டனர்.

பலத்த காயமடைந்துள்ள மேலும் 3 வீரர்கள் முதல் உதவிக்கு பிறகு ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 4 வீரர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மத்திய ரிசர்வ் பாதுகாப்புப்படை வீரரை முகாமில் இருந்த மற்றவர்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். அவரிடம் உயரதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மன அழுத்தம் காரணமாகவே இத்தகைய விபரீத செயலில் சி.ஆர்.பி.எஃப். வீரர் ஈடுபட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.


Tags : Chhattisgarh ,CRPF , Chhattisgarh, gun, CRPF Player, 4 killed
× RELATED சத்தீஸ்கர் கான்கேர் மாவட்டத்தில் 8...