மதுரை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு வழக்கை டிசம்பர் 1ம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 75 பேரில் 27 பேருக்கு சம்மன் அனுப்பியதில் 23 பேர் மதுரை கோர்ட்டில் நேரில் ஆஜரானதை அடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.