பூண்டி: தொடர் கனமழை காரணமாக பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திலிருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு வினாடிக்கு 2,000 கன அடி உபரி நீர் வெளியேற்றம் செய்யப்படுகிறது. மேலும், அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.